தமிழ்நாடு

tamil nadu

விவாகரத்தான இளம்பெண்; ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருக்க வற்புறுத்திய பல்மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் கைது

By

Published : Jul 12, 2022, 5:03 PM IST

சென்னையில் விவாகரத்தான இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஏமாற்றி தன் நண்பர்களுடன் தனிமையில் இருக்க வற்புறுத்திய பல் மருத்துவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

3 பேருக்கு சிறை
3 பேருக்கு சிறை

சென்னை: பள்ளிகரனை காமகோடி நகர், சான்ஸ்கிரிட் அப்பார்ட்மெண்டில் வசித்த விவாகரத்தான இளம்பெண்(30) ஒருவரும், அப்பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் நிஷாந்த்(32) என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே, கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே அந்த மருத்துவர் நிஷாந்த் அந்த பெண்ணிடமிருந்து அடிக்கடி செலவிற்காக கேட்கும் போதெல்லாம் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நிஷாந்த் அவரது நண்பர்கள் ஹர்த்திக், ஷெரின் ஆகியோருடன் போதை வஸ்த்துகளை பயன்படுத்தி நிலையில் அந்த இளம்பெண்ணை, தன் நண்பர்களுடன் தனிமையில் இருக்க வேண்டும் எனக் கூறி வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இது குறித்து நிஷாந்தின் தாயாரிடம் தெரிவித்தற்கு அவரோ, 'என் மகன் அப்படித்தான் பிடிக்கவில்லை என்றால் விலகிவிடு' என்று கூறியதாக தெரிகிறது.

இதற்கிடையே மேலும், நிஷாந்த் தனது நண்பர்களுடன் சந்தோஷமாக இல்லை என்றால், உன்னை அடித்து கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் செய்வதறியாத அந்த இளம்பெண், இதுகுறித்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், பல் மருத்துவர் நிஷந்த், அவரின் நண்பர்கள் ஷெரின், ஹர்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் (ஜூலை 10) சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: விளையாட்டால் வந்த வில்லங்கம்; ஜிபே நம்பரால் மாட்டிய ஜோக்கர்

ABOUT THE AUTHOR

...view details