தமிழ்நாடு

tamil nadu

கேரளாவில் கார் தீப்பிடித்து விபத்து - கர்ப்பிணியும் அவரது கணவரும் உயிரிழப்பு!

By

Published : Feb 2, 2023, 5:17 PM IST

கேரள மாநிலம், கண்ணூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் கர்ப்பிணியும், அவரது கணவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Two
Two

கண்ணூர்: கேரள மாநிலம், கண்ணூரில் குட்டியாட்டூரைச் சேர்ந்த பிரஜித்(32)- ரீஷா(26) தம்பதிக்கு பார்வதி என்ற 8 வயது மகள் உள்ளார். ரீஷா மீண்டும் கருவுற்றிருந்தார். இந்த நிலையில் இன்று(பிப்.2) பிரஜித், ரீஷா இருவரும் தங்களது குடும்பத்தினருடன் காரில் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.

தம்பதி இருவரும் காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தனர். ரீஷாவின் பெற்றோர், மாமியார், மகள் பார்வதி ஆகிய நால்வரும் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர். மாவட்ட மருத்துவமனை அருகே சென்றபோது கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரில் இருந்த அனைவரும் வெளியேற முயன்றனர்.

அதேசமயம் கார் எரிவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சென்று காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் காரில் பின் சீட்டில் அமர்ந்திருந்த 4 பேர் மீட்கப்பட்ட நிலையில், பிரஜித்- ரீஷா இருவரும் உயிரிழந்துவிட்டனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறினர். ஆனால், உரிய விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:"ராம் ராம் சொல்லு" நாய்க்கு பயிற்சி அளித்த பாஜக எம்எல்ஏ வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details