தமிழ்நாடு

tamil nadu

முனுகோடு இடைத்தேர்தல் - டிஆர்எஸ் வேட்பாளர் குஷுகுந்தல பிரபாகர் ரெட்டி வெற்றி

By

Published : Nov 6, 2022, 7:58 PM IST

முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலில், 12 சுற்றுகள் முடிவில் டிஆர்எஸ் வேட்பாளர் குஷுகுந்தல பிரபாகர் ரெட்டி 82,025 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

TRS
TRS

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜகோபால் ரெட்டி, ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதனால், முனுகோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ராஜகோபால் ரெட்டி பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் குஷுகுந்தல பிரபாகர் ரெட்டி போட்டியிட்டார்.

இத்தேர்தலில் டிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவியது. அரசியல் கட்சியினர் கடந்த சில வாரங்களாக வாக்காளர்களைக் கவர, பிரியாணி, மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வாரி வழங்கினர். இதைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி முனுகோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. மொத்தமுள்ள 15 சுற்றுகளில், 12 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. அதன்படி, டிஆர்எஸ் வேட்பாளர் குஷுகுந்தல பிரபாகர் ரெட்டி 82,025 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தார். பாஜக வேட்பாளர் ராஜகோபால் ரெட்டி, 74,224 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 15 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, குஷுகுந்தல பிரபாகர் ரெட்டியின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க:6 மாநிலங்களின் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

ABOUT THE AUTHOR

...view details