தமிழ்நாடு

tamil nadu

அயோத்தியில் திருநங்கையை கரம் பிடித்த இளைஞர்!

By

Published : Feb 18, 2021, 2:49 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் திருநங்கை ஒருவரை இளைஞர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

அயோத்தியில் திருநங்கை கரம் பிடித்த இளைஞர்!
அயோத்தியில் திருநங்கை கரம் பிடித்த இளைஞர்!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த திருநங்கை அஞ்சலி சிங்கும், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞரான சிவ் குமாரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். இதனையடுத்து தங்களது காதல் உறவை கல்யாண உறவாக்க தீர்மானித்தவர்கள், தங்கள் காதல் குறித்து இருவரது குடும்பத்தாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். முதலில் இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவிக்க, பின்னர் விடாது முயற்சித்ததையடுத்து, இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

நந்திகிராமில் உள்ள பழமையான கோயில் ஒன்றில் அஞ்சலி சிங்கிற்கும், சிவ் குமாருக்கும் நேற்று (பிப். 18) இந்து பாரம்பரிய திருமண முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் பாஜக உள்ளூர் பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

அயோத்தியில் திருநங்கை கரம் பிடித்த இளைஞர்!

இது குறித்து அஞ்சலி சிங் கூறுகையில், “முதலில் எங்க அப்பா அம்மா ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு பேசிப்பார்த்தோம், சம்மதம் தெரிவித்தனர். தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க...பரபரப்பான புதுச்சேரி அரசியல் சூழல்: துணைநிலை ஆளுநர் பதவியேற்கிறார் தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details