துர்காபூர் (மேற்குவங்கம்): மேற்குவங்க மாநிலம் துர்காபூர் காவல் துறையினர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்தியது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து உள்ளனர். இதனையடுத்து, கைது செய்த சிறுமியிடம் இருந்து காவல் துறையினர் வாக்குமூலம் பெற்று உள்ளனர்.
முன்னதாக, நேற்று (ஆகஸ்ட் 28) பிற்பகல் பந்தன்பள்ளி பகுதியில் சிறுமி சுற்றித் திரிவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்து உள்ளது. அது மட்டுமல்லாமல், மேற்கு புர்துவானின் துர்காபூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பாலியல் தொழில் நடக்கும் இடத்தில் இருந்து சிறுமி மீட்கப்பட்டு உள்ளார்.
அங்கு இருந்து சிறுமியை மீட்ட மற்ற பெண்கள், சிறுமியை முதலில் துர்பார் மஹிளா சமிதி அலுவலகத்தில் ஒப்படைத்து உள்ளனர். பின்னர், அவர்கள் துர்காபூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க, காவல் துறையினர் வந்து சிறுமியை மீட்டு உள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பங்களாதேஷைச் சேர்ந்த சிறுமி, துர்காபூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், சாய்னு பாய் என்ற பெண்ணின் வீட்டில் சிறுமி வைக்கப்பட்டு உள்ளார். சாய்னு பாய்க்கு பாலியல் தொழிலில் பழக்கம் இருந்து உள்ளது. இதனையடுத்து, சாய்னு பாயின் கணவர் முஸ்தக் அகமது மற்றும் பப்பு என்ற இளைஞர் ஆகியோர் சிறுமியை பாலியல் தொழில் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து உள்ளனர்.