தமிழ்நாடு

tamil nadu

West Bengal: பஞ்சாயத்து தேர்தலில் கலவரம்.. 15 பேர் படுகொலை! பாஜக - திரிணாமுல் இடையே கடும் போட்டி!

By

Published : Jul 8, 2023, 4:14 PM IST

Updated : Jul 8, 2023, 6:34 PM IST

கிராமப்புற பஞ்சாயத்து தேர்தலில் நடந்த வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்களில் 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.

West Bengal Violence
West Bengal Violence

கொல்கத்தா :மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களில் 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் ஜூலை 8ஆம் தேதி இன்று ஒரேகட்டமாக 73 ஆயிரத்து 887 இடங்களுக்கான கிராமப்புற பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 9ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது முதலே பல்வேறு பகுதியில் வன்முறைகள் வெடித்து வருகின்றன. மாநிலத்தை அளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் தொடங்கியது முதலே மாநிலத்தில் கலவரம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் வெடித்து வருவதாக கூறப்படுகிறது. வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர், பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எஃப் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட 10க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 3 பேரும், கிழக்கு பரதமான் மாவட்டத்தில் 2 பேர், மால்ட, நடியா, குஷ்பெஹார் வடக்கு தினஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவர் உள்பட மொத்தம் 15 பேர் வன்முறைச் சம்பவங்களுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் மொத்த உள்ள 73 அயிரத்து 881 பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான இடங்களுக்கு 2 லட்சத்து 6 ஆயிரம் பேர் போட்டியிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏறத்தாழ 5 கோடியே 67 லட்சம் வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய காலை முதலே வாக்களித்து வருகின்றனர். பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் போதும் பல்வேறு இடங்களில் தொடர் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மால்டா மாவட்டம் கோபால்பூர் கிரமம் ஜிஷாரத் டோல் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.கே. மாலிக் என்பவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட கலவரத்தில் வாக்குச் செலுத்த வந்தவர்கள், கட்சியினர் என பலர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாநிலத்தில் கிராமப்புற பஞ்சாயத்துகளை கைப்பற்ற ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதையும் படிங்க :சீனாவிடம் சுதந்திரம் கேட்கவில்லை... அங்கமாகவே தொடர விருப்பம்... தலாய்லாமா திடீர் பல்டி!

Last Updated :Jul 8, 2023, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details