தமிழ்நாடு

tamil nadu

“விளம்பரத்திற்காக வழக்கு போடுகிறார்கள்” - அமைச்சர் உதயநிதியின் சனாதனம் பேச்சு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்!

By PTI

Published : Sep 27, 2023, 5:23 PM IST

Seeking FIR against Udhayanidhi Stalin: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த பேச்சுக்கு எதிராக வழக்கு (FIR) பதிவு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, இதனுடன் தொடர்புடைய மற்ற வழக்குகளுடன் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

sc-tags-plea-seeking-fir-against-udhayanidhi-stalin-with-pending-petition
சனாதனம் சர்ச்சை பேச்சு: விளம்பரத்திற்காக வழக்கு போடுகிறார்கள் - தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்

டெல்லி:டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது என்றும். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.

கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது. எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்” என பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு (FIR) செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க:சென்னையில் ஐடி நிறுவனங்களில் திடீர் வருமான வரி சோதனை- காரணம் என்ன?

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா.எம்.திரிவேதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பதியப்படும் வழக்குகள் பொது நலம் சார்ந்தவை இல்லை. விளம்பரத்திற்காக வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 40க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த வழக்குகளில் பொது நலன் இல்லை விளம்பரங்களுக்காகவே எனத் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் கிஷோர் சௌத்ரி, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தெரிவிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இனப்படுகொலைக்கான அழைப்பு அரசால் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், தற்போது தாக்கல் செய்த மனு தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டியது இல்லை எனவும், இந்த மனுவை இது தொடர்பான மற்ற வழக்குகளுடன் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:எஸ்.ஜி.சூர்யா வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details