தமிழ்நாடு

tamil nadu

கர்நாடக காங்கிரசுக்கு ராகுல் அறிவுரை

By

Published : Jul 21, 2021, 2:22 PM IST

Updated : Jul 21, 2021, 3:30 PM IST

கர்நாடக காங்கிரசின் மூத்தத் தலைவர்கள் உள்கட்சி குழப்பத்தை ஏற்படுத்தாமல் ஒருங்கிணைந்து செயல்பட ராகுல் காந்தி அறிவுரை வழங்கியுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பமான சூழல் நிலவிவருகிறது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவரான சித்தராமையாவுக்கு இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது.

முன்னாள் முதலமைச்சரும் மூத்தத் தலைவருமான சித்தராமையாவின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, கட்சியின் முன்னணி முகமாக சிவகுமார் உருவெடுத்துவருகிறார். அவருக்கு ராகுல் காந்தியின் ஆதரவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தனது இடத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத சித்தராமையாவும் சிவகுமாருடன் முரண்டு பிடித்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இரு தலைவர்களையும் காங்கிரஸ் மேலிடம் அழைத்துப் பேசியுள்ளது.

மேலிடம் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இருவரையும் ஒருங்கிணைந்து கட்சிப் பணியாற்ற வேண்டும், வேறுபாடுகள் காரணமாகக் கட்சிக்குள் குழப்பம் உருவெடுக்கக் கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ராகுலின் இந்த அறிவுறுத்தல் காரணமாக இருவரும் சில மாதங்கள் அமைதி காப்பார்கள் எனக் கூறும் கர்நாடக காங்கிரஸ் வட்டாரம், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் யார் முதலமைச்சர் என்று வரும்போதுதான் மோதல் வெடிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தல்- காங்கிரஸ் தனித்துப் போட்டி!

Last Updated : Jul 21, 2021, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details