தமிழ்நாடு

tamil nadu

நயன்தாரா மீது மும்பையில் வழக்குப்பதிவா? - உண்மை நிலவரம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 4:34 PM IST

Updated : Jan 10, 2024, 4:53 PM IST

Nayanthara Annapoorani Movie: அன்னபூரணி பட காட்சி தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் ஜெய் மீது மும்பை போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஈடிவி பாரத்திடம் பேசிய புகார் தாரர் எஃப்ஐஆர் பதிவானதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

annapoorani movie issue
அன்னபூரணி பட விவகாரம்

மும்பை: அன்னபூரணி திரைப்படத்தின் கதையானது, பிராமணர் சமூகத்தை சேர்ந்த பெண்ணான அன்னபூரணி (நயன்தாரா) மிகப்பெரிய செஃப் (Chef) ஆக வேண்டும் என்ற ஆசையில், வீட்டை விட்டு வெளியேறி தனது லட்சியத்தை அடையப் போராடுகிறார்.அதன் தொடர்ச்சியாக, ஒரு ஹோட்டல் மேனேஜ்மண்ட் கல்லூரியில் சேர்ந்து தனது ஆசைப் பயணத்தை துவங்குகிறார். அந்த பயணத்தில் அவர் வெற்றி அடைந்தார? இல்லையா? என்பது தான் மீதி கதை.

இப்படத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்த அன்னபூரணி அசைவ உணவுகளை சமைப்பது மற்றும் சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றிருந்ததை அடுத்து, அன்னபூரணி திரைப்படம் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக கதையம்சம் கொண்டுள்ளதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு காட்சியில், நயன்தாராவை இறைச்சி சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக, ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று நாயகன் ஃபர்ஹான் (ஜெய்) கூறுவார். இந்த காட்சிக்கு கடும் சர்ச்சைகள் கிளம்பின. அந்த வகையில், இந்து அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் சோலங்கி என்பவர் இப்படம் மத உணர்வை புண்படுத்தும் வகையிலும், லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் விதமாகவும் எடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் ஜெய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து புகார் அளித்த ரமேஷ் சோலாங்கியிடம் ஈடிவி பாரத் செய்திக் குழு தொடர்பு கொண்டு கேட்டபோது, "காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை" என தகவல் தெரிவித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில், நயன்தாராவின் 75வது படமாக நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான அன்னபூரணி படமும், இவருக்கு சோலோ ஹீரோயின் கதையிலேயே அமைந்தது.நடிகர் ஜெய், கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Last Updated :Jan 10, 2024, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details