பெங்களூருவில் நடைபெற்ற எரிசக்தி வாரத்தின்போது அர்ஜென்டினாவின் அரசு நிறுவனமான YPF தலைவர் பாப்லோ கோன்சலஸ், புகழ்பெற்ற கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் ஜெர்சியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார். பிரதமர் மோடி விளையாட்டில் ஆர்வமிக்கவர். பல்வேறு விளையாட்டுகளில் நிகழ்த்தப்படும் சாதனைகள் குறித்து அவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடுவார்.
பிஃபா கால்பந்து உலககோப்பை போட்டியின் போதும் அவர் ட்விட்டரில் பதிவிட்டு வந்தார். பிரான்ஸ் - அர்ஜென்டினா இடையிலான உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியைப் பார்த்துவிட்டு, இது மிகவும் விறுவிறுப்பான கால்பந்து போட்டியாக நினைவு கூறப்படும். சாம்பியன் அர்ஜென்டினாவிற்கு வாழ்த்துக்கள். அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியின் மூலம் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என அவர் பதிவிட்டிருந்தது அவருக்கு கால்பந்து மீதும் மெஸ்ஸி மீதும் உள்ள ஈர்ப்பை காட்டுகிறது.