தமிழ்நாடு

tamil nadu

'தமிழகத்தின் எழுச்சிமிகு அடையாளம் பொங்கல்'- பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் வாழ்த்து!

By

Published : Jan 14, 2022, 11:42 AM IST

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோர் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

pm modi and rahul gandhi pongal greetings  modi pongal greetings  rahul gandhi pongal greetings  pongal greetings  political leaders pongal greetings  பொங்கல் பண்டிகை  பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து  ராகுல் காந்தி பொங்கல் வாழ்த்து
பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, ட்விட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “தமிழ்நாட்டின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்தச் சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இதேபோல் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

ராகுல் காந்தி பொங்கல் வாழ்த்து

இதையும் படிங்க: அமித் ஷா, பினராய் விஜயன் பொங்கல் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details