தமிழ்நாடு

tamil nadu

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது; மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

By

Published : Apr 7, 2022, 10:59 PM IST

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த வழக்கில் துணை சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அங்கு பொது தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் என்ற உத்தரவும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Deputy speaker's ruling erroneous  CJP Ata Bandial ruling today  Imran Khan and Pakistan  Qasim Suri  Pakistan Chief Justice order today  Setback for Imran Khan  Pak SC rules restores parliament  Pakistan no-trust vote on April 9
இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் காசிம் சூரி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி இருந்தார். இதனால், அங்கு ஆட்சியைக் கலைக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டு இருந்தது. அவரின் இந்த நடவடிக்கையினை சட்டப்பூர்வமானதாக ஏற்றுக்கொள்ள இயலாது என்று பாகிஸ்தான் நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இன்று (ஏப்.7) அறிவித்துள்ளது.

இந்த அமர்வு பாகிஸ்தானில் சட்டமன்ற துணை சபாநாயகர் பிரதமருக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் தற்போது அதற்கு உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத்தை கலைப்பதாக எடுக்கப்பட்ட முடிவு முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளது.

நாட்டின் தன்மை குறித்த தானாக முன்வைக்கப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அரிஃப் ஆல்வியின் முடிவு 'சட்டவிரோதமானது' என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இது தொடர்பான விசாரணைக்கு வருகிற ஏப்.9, சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மீண்டும் கூட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் முடிவடையாமல் அமர்வை ஒத்திவைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'துணை சபாநாயகர் ஏப்.3 அன்று நம்பிக்கையில்லா தீர்ப்பை வழங்கினார். மார்ச் 28அன்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு விடுப்புவழங்கப்பட்டது. சபாநாயகரின் தீர்ப்பு அரசியலமைப்பிற்கு முரணானது' என்று நீதிபதி பண்டியல் அறிவித்ததாக அங்கு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் பரஸ்பரம் ஆலோசனை நடத்தியதையடுத்து 5-0 என்ற ஏகமனதாக தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகர் சூரியின் நடவடிக்கை தவறானது மற்றும் அரசியலமைப்பின் 95ஆவது பிரிவின் மீறல் என்று தலைமை நீதிபதி பண்டியல் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஜனாதிபதி ஆரிஃப் அல்வி சார்பில் பாரிஸ்டர் அலி ஜாபர் தனது வாதங்களை முன்வைத்தார். அரசியலமைப்புச் சட்டப்படியே அனைத்தும் நடந்தால், நாட்டில் அரசியலமைப்பு நெருக்கடி எவ்வாறு உருவானது என்று பண்டியல் ஜாபரிடம் கேள்வி எழுப்பினார். நாட்டில் அரசியலமைப்பு நெருக்கடி இருக்கிறதா இல்லையா என்பதை ஏன் விளக்கவில்லை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கறிஞரிடம் கேட்டார்.

பிரதமர் மக்கள் பிரதிநிதியா என்று நீதிபதி மியான்கெல், ஜாபரிடம் கேட்டார். வழக்கறிஞர் சாதகமாக பதிலளித்தார். அப்போது மியான்கெல், நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு மீறப்பட்டால், பிரதமர் பாதுகாக்கப்படுவார்களா என்று கேட்டார்.

அப்போது, ​​அரசியல் சாசனம் அது அடிக்கோடிடும் விதிகளின்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜாபர் பதிலளித்தார். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, ஒவ்வொரு கட்டுரையையும் மனதில் கொள்ள வேண்டும் என்றார். ஒரு உறுப்பினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சட்டசபைக்கும் அநீதி இழைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று நீதிபதி பண்டியல் சரமாரியாக கேள்விகளை எழுப்பி, பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது என தீர்ப்பு கூறினார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு - இம்ரான்கானின் நிலைப்பாடு என்ன?

ABOUT THE AUTHOR

...view details