இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் 7.24 கோடி பேருக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மூன்றில் ஒரு பங்கு கிராம குடியிருப்புவாசிகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் திட்டம் மூலம் இந்திய கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுவிடும் என கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.