தமிழ்நாடு

tamil nadu

Parliament Adjourned : எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. 11வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

By

Published : Aug 3, 2023, 12:33 PM IST

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 11வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர்.

Parliament
Parliament

டெல்லி :எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 11வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர்.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கலவரச் சம்பவங்கள் மற்றும் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி மணிப்பூர் விவகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பிரதமர் மோடி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என முறையிட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்தது.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் விவாதம் நடத்தப்பட உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட். ) வழக்கம் போல் மழைக் கால கூட்டத் தொடரின் 11வது நாள் கூடியது. டெல்லி சேவைகள் மசோதா தொடர்பான விவாதம் மற்றும், டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்ய இருந்தன.

வழக்கம் போல் மணிப்பூர் பிரச்சினையை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் மக்களவை சபாநாயகர் முன் திரண்டு கோஷம் எழுப்பினர். மேலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் அவை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் பொறுப்பாளர் அவர் தான் என்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை எம்.பிக்கள் கடைபிடிக்கும் வரை அவைக்கு வரப்போவதில்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியை அடுத்து அவை தொடங்கிய 20 நிமிடங்களிலேயே மதியம் 2 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க :Gyanvapi mosque: ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி! அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details