ஸ்டாக்ஹோம்: 2023ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் வழங்குகின்றது. இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த பியர் அகோஸ்டினி, ஜெர்மனியைச் சேர்ந்த பிரென்ச் க்ரஸ்ஸ், ஸ்வீடனைச் சேர்ந்த அன்னே எல்'ஹுல்லியர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்று இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு எலக்ட்ரான் டைனமிக்ஸ் தொடர்பான ஆய்வுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என மொத்தமாக ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.
இதையும் படிங்க:எதிர்பாலினத்தவரிடம் பேச தயக்கமா? ஆரோக்கிமான உரையாடலுக்கு இதுதான் வழி
நோபல் பரிசு பெற்ற மூன்று விஞ்ஞானிகளுக்கும் பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளுக்குத் தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பில் 7.33 கோடி ரொக்கம் (மூன்று விஞ்ஞானிகளுக்கும் சேர்த்து) ஆகியவை வழங்கப்படுகின்றது. "ஒளியின் மிகக் குறுகிய துடிப்புகளை உருவாக்குவதற்கான வழியை நிரூபித்துள்ளனர், இது எலக்ட்ரான்கள் நகரும் அல்லது ஆற்றலை மாற்றும் விரைவான செயல்முறைகளை அளவிடப் பயன்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.