சத்தீஸ்கர்:சத்தீஸ்கரில் உள்ள தென்கிழக்கு மத்திய இரயில்வே (SECR) மண்டலம் சென்ற திங்கள் கிழமை (மே 16) மாலை, நான்கு ரேக்குகள் கொண்ட நிலக்கரி ஏற்றப்பட்ட ரயில்களை ஒரே யூனிட்டாக சுமார் 2.8 கிலோமீட்டராக இணைத்து, மிக நீளமான சரக்கு ரயிலை வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
SECR(தென்கிழக்கு மத்திய இரயில்வே மண்டலம்) இந்த சிறப்பு சரக்கு ரயிலுக்கு 'சூப்பர் சேஷ்-நாக்' என்று பெயரிட்டுள்ளது. 232 வேகன்கள் கொண்ட நான்கு இன்ஜின்கள் செயல்படுகிறது. இதனை 12 பணியாளர்கள் இயக்கினர். இது கோர்பாவிலிருந்து நாக்பூருக்கு ஒரே நேரத்தில் 16,000 டன் நிலக்கரியை அனுப்பியுள்ளது.