ராஜ்கர்: மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து இஸ்லாமிய கைதிகளின் தாடியை வலுக்கட்டாயமாக வெட்டியதாக புகார் எழுந்தது. சிறைக் காவலர் தங்களது தாடியைப் பார்த்து ஆத்திரமடைந்து, அதனை வெட்டியதாகவும், தங்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறி திட்டியதாகவும் சிறையிலிருந்து வெளியே வந்த கைதிகள் குற்றம் சாட்டினர்.
இஸ்லாமிய மத உணர்வை புண்படுத்திய சிறைக்காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்துக்கும் கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில், கைதிகளுக்கு வலுக்கட்டாயமாக தாடியை வெட்டிய சம்பவத்துக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.