பெங்களூரு:கர்நாடகா மாநிலம் உடுப்பி நகரைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து மிதவை இல்லம் எனப்படும் சொகுசு படகு இல்ல சேவையைத் தொடங்கியுள்ளனர். இந்தப் படகு இல்லங்கள், அனைத்து வயது பயணிகளுக்கும் ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும் என அந்த இளைஞர்கள் கூறுகின்றனர்.
சொகுசு விடுதிகளைப் போன்று இதில், பார்ட்டி ஹால், சொகுசு மெத்தைகள், அறைகள் உள்ளன. பயணிகளின் கட்டணத்திற்கு ஏற்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்தப் படகில், ஐந்து வித்தியாசமான அறைகளும், பார்ட்டி ஹால்களும் உள்ளன.