தமிழ்நாடு

tamil nadu

Kerala Bomb Blast : மருத்துவமனைகள் உஷார் நிலை.. விடுமுறை பணியாளர்கள் உடனடி பணிக்கு திரும்ப அமைச்சர் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 4:13 PM IST

Kerala health minister recall medical staffs to work: கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தினால் எர்ணாகுளம் சுற்றியுள்ள மருத்துவமனைகளைத் தயார் செய்யவும், விடுமுறையிலுள்ள மருத்துவர், மருத்துவ பணியாளர்கள், அதிகாரிகளை உடனடியாக பணிக்குத் திரும்பவும் அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

kerala-blasts-health-minister-veena-george-puts-district-hospitals-on-alert-orders-staff-on-leave-to-return
கேரளா குண்டுவெடிப்பு: விடுமுறையிலுள்ள மருத்துவ பணியாளர்கள் வேலைக்குத் திரும்ப சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!

திருவனந்தபுரம் : எர்ணாகுளம் களமச்சேரி பகுதியில் இன்று (அக். 29) காலை மதவழிப்பாட்டு நிகழ்ச்சியின் போது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து, மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்குமாறும், விடுமுறையிலுள்ள மருத்துவ பணியாளர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வெளியீடுள்ள அறிக்கையில், "களமச்சேரியிலுள்ள மாநாட்டு மையத்தில் இன்று (அக். 29) நடைபெற்ற மதவழிப்பாட்டு பொது நிகழ்ச்சியில் குண்டுவெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கேரளா சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் கேரளா மருத்துவக் கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், எர்ணாகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள, அனைத்து மருத்துவமனைகளையும் தயார் செய்யவும், விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எர்ணாகுளம் பொது மருத்துவமனை, கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வசதிகளைத் தயார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளைத் தயார் செய்யக் கூடுதல் பணியாளர்கள் ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முகேஷ் அம்பானிக்கு ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல்!

கேரளா காவல்துறை கூற்றுப்படி, இன்று (அக். 29) ஞாயிற்றுக்கிழமை கேரளா மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரி பகுதியில் உள்ள மதவழிப்பாட்டு பொதுக் கூட்டத்தில் காலை 9 மணிக்கு முதல் குண்டு வெடிப்பு நடந்ததாகவும், அதன்பின் 1 மணி நேரத்திற்குப் பின்பு அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த மதவழிப்பாட்டு நிகழ்ச்சி அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்று (அக். 29) மாலை நிறைவடைய இருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறும் போது, "குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்ய தேசிய பாதுகாப்பு படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது" எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:கேரளாவில் மதவழிபாட்டு நிகழ்ச்சியில் வெடி விபத்து - என்ஐஏ சோதனை என தகவல்!

ABOUT THE AUTHOR

...view details