பெங்களூரு:இராணுவ செவிலியர் பணியில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 100 சதவீத இடஒதுக்கீட்டை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகா செவிலியர் சங்கம் மற்றும் ஹூப்ளியில் உள்ள செவிலியர் இன்ஸ்டிடியூட்டின் முதல்வர் மற்றும் விரிவுரையாளர் சஞ்சய் எம் பீராயூர் ஆகியோர், கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில், இராணுவ நர்சிங் சர்வீசஸ் ஆணை சட்டம் 1943-இன் கீழ் பெண்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்றும், இராணுவ நர்சிங் சர்வீசஸ் ஆணைச் சட்டம் 1943-இல் 6வது பிரிவில் உள்ள ‘பெண் என்றால்’ என்ற வார்த்தையை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற தார்வாட் கிளையில், நீதிபதி அனந்த் ராமநாத் ஹெக்டே அமர்வு முன் வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அரசியல் சாசனத்தின்படி, பெண்களை தனி வகுப்பு என்று கூறுவது நியாயமானதுதான். ஆனால், நியாயமற்ற முறையில் பெண்களுக்கு மட்டும் 100 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கூடாது. இதனால் ஆண்கள் இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்படுவர்.