பெங்களூரு (கர்நாடகா): ஃபேஸ்புக் உதவியுடன் 1 ஆண்டுக்குப் பின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தன் பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சுஹாஸ். ஓராண்டுக்கு முன்பு, தனது கிராமத்தில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக ரயிலில் ஏறி பெங்களூரு வந்தடைந்தார். ரயில் எங்கு செல்கிறது என்று தெரியாமல் கர்நாடகாவிற்கு வந்து அடைந்தார்.
இந்தநிலையில் பெங்களூரு பகுதியிலேயே சுற்றித் திரிந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பிடிஎம் லேஅவுட் பகுதியில் சிறுவன் சுற்றித் திரிந்த நிலையில், அப்பகுதி பேக்கரி உரிமையாளர் நிதின், ஸ்ரீதர் சிறுவனிடம் விசாரித்துள்ளனர். ஹிந்தியில் பேசிய சுஹாஸ், ஊரின் பெயர் மறந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், தனது மூத்த சகோதரரின் பெயரை மட்டும் நினைவில் வைத்துக் கூறியுள்ளார்.