தமிழ்நாடு

tamil nadu

மோடி அவதூறு வழக்கு... ராகுல் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை... ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்!

By

Published : Jul 4, 2023, 10:54 PM IST

மோடி அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

rahul gandhi
rahul gandhi

பாட்னா : பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார்.

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்து நடவடிக்கை மேற்கொண்டது.

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்நிலையில், மோடி அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தல் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மோடி பெயர் குறித்து அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீது கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறி, அடுத்த விசாரணை ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறும் என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேநேரம் பிரதமர் மோடி அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ள நிலையில், அதை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றம் ஜூலை 4ஆம் தேதி வழக்கு குறித்த விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க இடைக்கால தடை விதித்து ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதையும் படிங்க :நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்... எய்ம்ஸ் மாணவர் உள்பட கும்பல் கைது! டெல்லி போலீசார் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details