தமிழ்நாடு

tamil nadu

குழந்தை வேண்டி இளம்பெண்கள் நரபலி...

By

Published : Oct 27, 2021, 2:54 PM IST

குழந்தை வேண்டி இரண்டு இளம்பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Human sacrifice
Human sacrifice

போபால்:மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பந்து மதுரியா-மம்தா தம்பதிக்குத் திருமணமாகி 18 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. அதன் காரணமாக, பல கோயில்களுக்குச் சென்று வேண்டுவது, மருத்துவர்களை ஆலோசிப்பது என பல முயற்சிகள் எடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்களது உறவினரான நீரஜ் என்பவர் இந்த தம்பதியை சாமியார் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அந்த வேளையில் சாமியார், குழந்தை பாக்கியம் கிடைக்க இளம்பெண்களை நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதைத்தொர்ந்து, குவாலியரில் ஒரோ வாரத்தில் இரண்டு இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

இதுதொடர்பான விசாரணையில், நீரஜ்தான் நரபலிக்காக இரண்டு பேரையும் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதனடிப்படையில், நீரஜ், பந்து மதுரியா, மம்தா, மம்தாவின் சகோதரி மீரா, சாமியார் யாதவ் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை வேண்டி இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நரபலி பூஜைக்காக மகளை பலி கொடுத்த தந்தை!

ABOUT THE AUTHOR

...view details