தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் ஒரு லட்சம் கோடியை தாண்டிய மே மாத ஜி.எஸ்.டி. வசூல்

By

Published : Jun 5, 2021, 5:47 PM IST

Updated : Jun 5, 2021, 7:45 PM IST

ஜி.எஸ்.டி வசூல் தொடர்ந்து எட்டாவது மாதமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி.
ஜி.எஸ்.டி.

2021 மே மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் குறித்த புள்ளி விவரத்தை ஒன்றிய நிதியமைச்சகம் இன்று (ஜூன் 5) வெளியிட்டுள்ளது. அதன்படி, மே மாதம் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 709 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 17 ஆயிரத்து 592 கோடி ரூபாயாக உள்ளது. மாநில சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 22 ஆயிரத்து 653 கோடி ரூபாயாகவும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 53 ஆயிரத்து 199 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் செஸ் வரி வசூல் ஒன்பதாயிரத்து 265 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், தொடர்ந்து எட்டாவது மாதமாக நாட்டின் ஜி.எஸ்.டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 2020ஆம் ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு மே மாத வசூல் 65 விழுக்காடு அதிகமாகும். கரோனா லாக்டவுன் காலத்திலும் ஜி.எஸ்.டி. வசூல் உயர்வை கண்டுள்ளது நம்பிக்கை அளிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:செப்டம்பரில் கோவிட் மூன்றாம் அலை? எச்சரிக்கும் நிதி ஆயோக்

Last Updated :Jun 5, 2021, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details