தமிழ்நாடு

tamil nadu

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தின் காட்வின், மாலதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 6:00 PM IST

National Teachers' Awards 2023: தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் மாலதி ஆகிய இரு ஆசிரியர்களுக்கும் தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: ஆசிரியர் தினம் இன்று (செப்.5) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில அளவில் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 75 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்வு டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அந்த வகையில், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.மாலதி ஆகியோருக்கு நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

இதையும் படிங்க:கல்லீரல் பாதுகாப்பில் கில்லியான சென்னை அரசு மருத்துவமனை; சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details