தமிழ்நாடு

tamil nadu

லதா ரஜினிகாந்த் எதிரான மோசடி வழக்கு: 'ஆட் பீரோ' நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 4:36 PM IST

Fraudulent case against Latha Rajinikanth: லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து 'ஆட் பீரோ' நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

fraudulent-case-against-latha-rajinikanth-in-sc
fraudulent-case-against-latha-rajinikanth-in-sc

டெல்லி:லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கில் சில பிரிவுகள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி, 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றார். இதற்காக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டிருந்தார்.

இந்நிலையில் முரளி கடனாக பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு திரும்ப அளிக்காததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015ஆம் ஆண்டு அபிர்சந்த் நஹார் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலிசார், லதா ரஜினிகாந்த் மீது போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது, தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, மோசடி செய்து ஏமாற்ற முயற்சித்தது, ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க:"மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை அளிப்பது அவசியம்" - மதுரை உயர்நீதிமன்றம் கருத்து!

இந்நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், குற்றப்பத்திரிகையில் லதா ரஜினிகாந்த் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டம் 196, 199, 420 ஆகிய பிரிவுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக்கூறி அவர் மீதான வழக்கில் இருந்து சில பிரிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதேநேரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான, ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது ஆகிய பிரிவு குறித்து கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில் லதா ரஜினிகாந்த் மீது போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது, தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, மோசடி செய்து ஏமாற்ற முயற்சித்தது போன்ற பிரிவுகளை ரத்து செய்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 'ஆட் பீரோ' நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இதே போல ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது குறித்து கீழமை நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டதை எதிர்த்தும் லதா ரஜினிகாந்த் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஜெ.பி.பர்திவாலா அமர்வில் செப்டம்பர் 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க:அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அதிரடி உத்தரவு: உத்தரவை கடைபிடிக்காத கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details