ராஜ்கர்க் :மத்திய பிரதேசம் மாநிலம் ராஜ்கர்க் மாவட்டம் பிப்லியா ரசோடா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி மாஹி, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. சிறுமி குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநில பேரிடர் மீட்பு படை சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 22 அடி ஆழத்தில் சிறுமி சிக்கி கொண்ட நிலையில், ஆழ்துளை கிணற்றின் அருகே 25 அடி ஆழம் குழி தோண்டி இன்று (டிச. 6) அதிகாலை சிறுமியை பத்திரமாக மீட்டனர்.