தமிழ்நாடு

tamil nadu

உளவுத்துறை இயக்குனர் வீட்டில் சிஆர்பிஎப் வீரர் தற்கொலை!

By

Published : Feb 4, 2023, 10:10 PM IST

Updated : Feb 4, 2023, 10:31 PM IST

டெல்லி உளவுத்துறை இயக்குனர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CRPF personnel deployed at IB Directors residence shoots himself dead
உளவுத்துறை இயக்குனர் வீட்டில் சிஆர்பிஎப் வீரர் தற்கொலை

டெல்லி: உளவுத்துறை இயக்குனரின் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் (பிப்.,4) மாலை 4.15 மணியளவில் தனது தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் 53 வயதான உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜ்பீர் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து தற்கொலை கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை.

இறந்தவரின் பிரேதப் பரிசோதனை சனிக்கிழமை முடிவடையும், அதன் பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அவரது தற்கொலை குறித்த குறிப்பு எதுவும் அங்கு கிடைக்கவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிஆர்பிஎப் வீரர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வாகாது

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதேபோல் சிஆர்பிஎப் வீரர் நரேஷ் ஜாட் தனது தற்கொலை செய்துகொண்டார். சிஆர்பிஎப் ஜாட் மகளின் 12ஆம் வகுப்பு வரையிலான கல்விச் செலவை ஏற்றுக்கொண்டது. மேலும் இறந்தவரின் மனைவிக்கு மறுமணம் ஆகும் வரை ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அரசு வீட்டில் குடும்பம் வாழலாம் என்றும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இருந்து சக பயணி தள்ளிவிட்டதில் இளைஞர் உயிரிழப்பு

Last Updated :Feb 4, 2023, 10:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details