தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டிய கரோனா பாதிப்பு

By

Published : Apr 29, 2021, 11:08 AM IST

Updated : Apr 29, 2021, 3:05 PM IST

நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 79 ஆயிரத்து 257ஆக அதிகரித்துள்ளது.

COVID-19: India records 3.79 lakh new cases, 3,645 deaths in last 24 hours
COVID-19: India records 3.79 lakh new cases, 3,645 deaths in last 24 hours

டெல்லி:நாட்டில் கரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்தப் புள்ளி விவரத்தின்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 79 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 83 லட்சத்து 76 ஆயிரத்து 524 ஆக உள்ளது.

நேற்று ஒரேநாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், மூன்றாயிரத்து 645 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்து 86 ஆயிரத்து 878 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து நான்காயிரத்து 832 ஆகவும் உள்ளது.

தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 லட்சத்து 84 ஆயிரத்து 814 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

Last Updated : Apr 29, 2021, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details