தமிழ்நாடு

tamil nadu

ஒரே நாளில் 2,104 பேர் பலி - இந்தியாவை மிரட்டும் கரோனா

By

Published : Apr 22, 2021, 10:40 AM IST

இதுவரை இல்லாத வகையில் நாட்டில் ஒரே நாளில் மூன்று லட்சத்து 14 ஆயிரத்து 835 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

COVID-19
கரோனா

இந்தியாவில் கடந்த சில நாள்களாகக் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 14 ஆயிரத்து 835 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேபோல, நேற்று (ஏப்ரல் 21) 2,104 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 657ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 880ஆக உள்ளது.

தற்போது, 22 லட்சத்து 91 ஆயிரத்து 428 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை மொத்தமாக 13 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 644 தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:மேற்கு வங்கத்தில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details