தமிழ்நாடு

tamil nadu

எச்சில் துப்பியபோது நேர்ந்த சோகம்: 6-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி!

By

Published : Jan 3, 2023, 8:47 PM IST

மருத்துவமனையின் ஆறாவது மாடி ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்ற இளைஞர் கால் இடறி தலைகுப்புற விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

எச்சில் துப்பாதீர்
எச்சில் துப்பாதீர்

பாரத்பூர்:ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் அடுத்த இகாரன் பகுதியைச்சேர்ந்தவர், சந்திரபால். 21 வயதான சந்திரபால், பாரத்பூர் பகுதியில் உள்ள ஆர்.பி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை காணச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினரை நலம் விசாரித்த சந்திரபால், அங்கிருந்த ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறிய சந்திரபால், 6-வது மாடியில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தார்.

பலத்தை காயங்களுடன் மீட்கப்பட்ட சந்திரபால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சந்திரபாலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:"மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கு அரசாங்கத்தை பொறுப்பாக்க முடியாது" - உச்ச நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details