கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 6ம் தேதி வரை புதிய வரிகள் விதிக்கக் கூடாது என்றும் வங்கிக் கடன்களை வசூலிக்க கூடாது என்றும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “கேரளத்தில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏராளமானோா் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சூழ்நிலையில், பொதுமக்களிடமிருந்து கடன்களை வசூலிக்கவும் புதிய வரி விதிப்புகளை மேற்கொள்ளவும் கூடாது” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் புதிய வரி விதிப்பு உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்தார். கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.