தமிழ்நாடு

tamil nadu

காரில் விளையாடிய சிறுவர்கள்: மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!

By

Published : Oct 1, 2020, 12:10 PM IST

மகாராஷ்டிராவில் காரில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

மூச்சுத் திணறி சிறுவர்கள் உயிரிழப்பு
மூச்சுத் திணறி சிறுவர்கள் உயிரிழப்பு

மும்பை:மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த சுஹைல் கான் (6), அப்பாஸ் கான் (4) ஆகிய சிறுவர்கள். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் சென்று விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக காரின் கதவு லாக் ஆகிவிட்டது. இதனால், சிறுவர்கள் காரிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துவந்த நிலையில், இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

இதேபோன்ற சம்பவம், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திரா மாநிலத்தில் மூன்று குழந்தைகள் காருக்குள் விளையாடும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

மேலும், கடந்த ஜூன் மாதம் உத்தரப் பிரதேசத்தில் காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த நான்கு குழந்தைகளில், இருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

இதையும் படிங்க:பொங்கல் சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழப்பு - திருப்பத்தூரில் சோகம்

ABOUT THE AUTHOR

...view details