தமிழ்நாடு

tamil nadu

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

By

Published : Oct 16, 2019, 7:12 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்தநாக்கில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

J&K

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பசல்பூரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மூன்று பேர் என்கவுன்ட்டரில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்தநாக் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது தொடர்ச்சியாக துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூன்று பேரும் உள்ளுர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் உடல் விசாரணைக்குப் பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பாதுகாப்பு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: "ஃபரூக் அப்துல்லா மீது பாய்ந்த பிஎஸ்ஏ சட்டம்" - அரசியல் விமர்சகர்கள் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details