சர்வதேச மணல் சிற்பத் திருவிழா ஒடிசாவின் சந்திரபாகா கடற்கரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2015ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மணல் சிற்பத் திருவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமாக நடத்தப்படும் இந்த திருவிழாவில் ஆடப்படும் நடனம் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு இந்த திருவிழாவை ஒடிசா சுற்றுலாத் துறையோடு இணைந்து, மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் நடத்துகிறார். மணல் சிற்பங்களை கொண்டாடுவதற்கும், மணல் சிற்ப கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கும் இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.