தமிழ்நாடு

tamil nadu

கோவிட்-19: இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

By

Published : Oct 3, 2020, 10:22 AM IST

இந்தியாவில் கோவிட்-19 காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

கோவிட்-19
கோவிட்-19

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 79 ஆயிரத்து 476 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் ஆயிரத்து 69 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 64 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 65 லட்சத்து 73 ஆயிரத்து 545 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 லட்சத்து 44 ஆயிரத்து 996 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 54 லட்சத்து 27 ஆயிரத்து 707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 842 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஒரு லட்சம் உயிரிழப்புகளைச் சந்தித்த மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (அக். 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 11 லட்சத்து 32 ஆயிரத்து 675 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 7 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 403 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உடல் பருமன்: கரோனா காலத்தில் மற்றுமொரு பிரச்னை!

ABOUT THE AUTHOR

...view details