தமிழ்நாடு

tamil nadu

சாலை விபத்தில் நான்கு பேர் பலி- கர்நாடகாவில் சோகம்

By

Published : Aug 24, 2019, 6:10 PM IST

பெங்களூரு: கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் நான்குபேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெங்களூரு ஊரக மாவட்டத்தில் நடந்துள்ளது.

road-accident

கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாபூர் மாவட்டம், நாக்கலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மல்லிகார்ஜூன் ரெட்டி, நாகராஜூ, அசோக் ரெட்டி ஆகியோர் தங்களது உறவினர்களுடன் காரில் பெங்களூருவில் இருந்து சிக்கப்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் சென்ற கார் பெங்களூரு ஊரக மாவட்டம், தேவனஹள்ளி பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது.

இதில் மல்லிகார்ஜூன் ரெட்டி, நாகராஜூ, அசோக் ரெட்டி உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வந்து உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:Body:



Updated script, Car over turned :4 dead on spot



Car overturned near Devanahalli of Bengaluru rural district and 4 dead on the spot while 5 are injured.



The dead people are,Mallikarjun reddy, Nagaraju, Ashok reddy and Sundar who were basically from Nakkalapalli village of bagepalli thaluk in Chickaballapur district.



The wounded are treated in Hosakote and Bengaluru private hospital. The Channarayapattana police visited the spot and filed the case. 


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details