தமிழ்நாடு

tamil nadu

ஒற்றுமை சிலை வளாகத்தில் சபாநாயகர் கருத்தரங்கம்!

By

Published : Nov 12, 2020, 8:40 AM IST

மாநில சபாநாயகர்கள், செயலர்கள் கருத்தரங்கம் ஒற்றுமை சிலை அமைந்திருக்கும் இடத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கில் சட்டப்பேரவை பணிகள், செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

Speaker's Conference  Statue of Unity  Kevadia  First speakers' conference  legislative assemblies  President Ramnath Kovind  Narendra Modi  ஒற்றுமை சிலை  சபாநாயகர் கருத்தரங்கம்  கருத்தரங்கம்
Speaker's Conference Statue of Unity Kevadia First speakers' conference legislative assemblies President Ramnath Kovind Narendra Modi ஒற்றுமை சிலை சபாநாயகர் கருத்தரங்கம் கருத்தரங்கம்

காந்திநகர்: சபாநாயகர்கள் கருத்தரங்கம் நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி, 26ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு ஒற்றுமை சிலை அமைந்திருக்கும் பகுதியில் நடக்கிறது.

இதில் மாநில சபாநாயகர்கள், செயலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்தக் கருத்தரங்கில், சட்டப்பேரவை பணிகள், செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னின்று நடத்துவார். இந்த மாநாட்டில் அனைத்து மாநில சபாநாயகர்களும் கலந்துகொள்ள உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கருத்தரங்கை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிங்க:“குடும்ப கட்சிகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து”- பிரதமர் நரேந்திர மோடி

ABOUT THE AUTHOR

...view details