தமிழ்நாடு

tamil nadu

டெல்லி கலவரம் : மேலும் இரண்டு பேர் கைது!

By

Published : Mar 9, 2020, 12:03 AM IST

டெல்லி : குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரத்துக்கு தொடர்புடையதாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

delhi  violence
delhi violence

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்த போராட்டம் கடந்த மாதம் 24ஆம் தேதி (திங்கள்கிழமை) கலவரமாக மாறியது. தொடர்ந்து மூன்று நாள்கள் நடந்த இந்தக் கலவரத்தில் காவல் துறை அலுவலர்கள் இருவர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.


இந்த விசாரணையில், டெல்லி சாந்த் பாக் பகுதியில் ஏற்பட்ட கலவரத்துக்கு லியாகத், ரியாசாத் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து டெல்லி காவல் துறையினர் அவர்களை கார்காடோமா நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

இதனிடையே,கலவரத்தில் உளவுப் பிரவு அலுவலர் அன்கித் குமார் கொல்லப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தஹீர் ஹூசைன் காவல் துறையினர் விசாரணை செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், லியாகத்தை 14 நாள்கள் நீதிமன்ற காவலிலும், ரியாசாத்தை மூன்று நாள்கள் காவல் நிலையித்திலும் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.

இதையும் படிங்க :டெல்லி கலவரம் : ஸ்வீட் கடை ஊழியரைக் கொன்றவர் கைது

ABOUT THE AUTHOR

...view details