ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நந்திகமாவை சேர்ந்தவர் நூர்யூதீன். இவர் சரிவு புஷ் அப்பில் சாதனை புரிந்துள்ளார். சரிவு புஷ் அப் என்பது சாதாரண புஷ் அப்பில் இருந்து சிறு மறுப்பட்டது. இதில் கால்களை உயரமான இடத்தில் வைத்து கைகளை தரையில் வைத்து எடுக்கும் புஷ் அப் ஆகும். இதனால் கைகள் சற்று அதிகமான உடல் எடை தாங்க வேண்டும்.
இந்த வகையான புஷ் அப்பில், இவர் 50 விநாடிகளில் 100 புஷ் அப்களை எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனையடுத்து இவரது பெயரை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Last Updated : Aug 13, 2019, 12:03 PM IST