தமிழ்நாடு

tamil nadu

பாதுகாப்பு நிலைமையை‌ ஆய்வு செய்ய ராணுவத் தளபதி ஸ்ரீநகருக்கு வருகை

By

Published : Sep 18, 2020, 6:26 AM IST

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்ய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே ஸ்ரீநகருக்கு வருகை தருகின்றார்.

Army chief General Manoj Mukund Naravane
Army chief General Manoj Mukund Naravane

பாகிஸ்தானின் யுத்த நிறுத்த மீறல்கள் அதிகரித்துவரும் பின்னணியில், ஜம்மு-காஷ்மீரில் நடந்துவரும் பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்ய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே ஸ்ரீநகருக்கு வருகை தருகிறார்.

இந்த வருகையின் போது,‌ ராணுவத் தலைவர் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஓ.சி) முன்னோக்கி உள்ள இடங்களை ஆய்வு செய்வார். மேலும் அங்குள்ள படைகளின் தயார்நிலை குறித்து முதலில் ஆய்வு செய்வார் என கூறப்படுகிறது.

ஸ்ரீநகரில் சினார் கார்ப்ஸின் மூத்த அலுவலர் பாதுகாப்பு நிலைமை குறித்து ராணுவத் தலைவருக்கு விளக்கமளிப்பார். கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்னைகள் தொடர்பாக இந்தியாவும் சீனாவும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டுடன் போர்நிறுத்த போர் மீறல்களை அதிகரித்துள்ளது.

ஜெனரல் நரவனே லடாக், ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரு எல்லைகளின் நிலைமையை மூத்த தளபதிகளுடன் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார் என்று ராணுவ வட்டாரங்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தன.

ABOUT THE AUTHOR

...view details