தமிழ்நாடு

tamil nadu

ஆம் ஆத்மி கவுன்சிலரை காப்பாற்றுவது ஏன்? கெஜ்ரிவாலுக்கு மனோஜ் திவாரி கேள்வி

By

Published : Feb 28, 2020, 7:37 AM IST

டெல்லி கலவரத்தில் ஈடுபட்டது எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிவிட்டு சொந்தக் கட்சி கவுன்சிலரை காப்பாற்ற முயற்சிப்பது ஏன் என மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம் ஆத்மி கவுன்சிலரை காப்பாற்றுவது ஏன்? கெஜ்ரிவாலுக்கு மனோஜ் திவாரி கேள்வி  AAP councillor made 'advance preparations' for violence in Delhi, alleges BJP's Manoj Tiwari  AAP councillor Tahir Hussain, Arvind Kejriwal, Manoj Tiwari, Gautam Gambhir  டெல்லி கலவரம், தஹீர் உசேன், ஆம் ஆத்மி, பாஜக, மனோஜ் திவாரி, கௌதம் கம்பீர்
AAP councillor made 'advance preparations' for violence in Delhi, alleges BJP's Manoj Tiwari

வடகிழக்கு டெல்லியின் சந்த் பாக் பகுதியில் நடந்த வன்முறையில் முகாந்திரம் இருப்பதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தஹீர் உசேன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது டெல்லி காவலர்கள் கொலை, தடயங்கள் அழித்தல் உள்ளிட்ட இருபிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தஹீர் உசேனை காப்பாற்ற முயல்வது ஏன் என மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி கேள்வியெழுப்பினார். இது குறித்து அவர் கூறுகையில், “டெல்லி வன்முறையில் எந்தக் கட்சியை சேர்ந்தவர் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

ஆனால் சொந்தக் கட்சிக்காரரே வன்முறையில் இறங்கியுள்ளார். ஆம் ஆத்மி கவுன்சிலர் உசேனின் வீட்டில் பெட்ரோல் குண்டுகள், கற்குவியல், திராவகம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆக வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லி கலவரத்தில் 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறையில் திட்டமிட்டு தனியாரின் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. டெல்லி வன்முறையை தடுக்க காவல் துறை தவறிவிட்டது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சுமத்தினார்.

தற்போது வன்முறையை பரப்பியதே தன் சொந்தக் கட்சி கவுன்சிலர் என தெரிந்ததும் அதை மூடி மறைக்கிறது” என்றார்.

அதேபோல், டெல்லி (கிழக்கு) மக்களவை உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் ட்விட்டரில், “டெல்லி கலவரத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உளவு அதிகாரி கொன்று சாக்கடையில் வீசப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் கலவரக்காரர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார், பெட்ரோல் குண்டுகளை வீசினார் என்று தஹீர் உசேன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது நிரூபிக்கப்பட்டால் அவரை மக்கள், சட்டம் அல்லது கடவுள் மன்னிக்கமாட்டார்கள். அரவிந்த் கெஜ்ரிவால், உங்கள் மௌனம் செவிடன் காதில் ஊதிய சங்குப் போல் உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சோனியாவை சந்தித்த நவ்ஜோத் சிங் சித்து - என்ன பேசுனாங்க தெரியுமா?

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details