தமிழ்நாடு

tamil nadu

UPI: யுபிஐ பணப்பரிமாற்றம் செய்வோர் உஷார்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

By

Published : Mar 6, 2023, 1:26 PM IST

Updated : Mar 6, 2023, 1:39 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு ரூபாய் முதல் ஆயிரக்கணக்கிலான ரூபாய் வரை ஆன்லைன் யுபிஐ செயலிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்து வருகிறோம். நாம் சரியான முறையில் தான் செய்கிறோமோ, நமது நிதி சார்ந்த தகவல்கள் ரகசியமாக உள்ளதா? இந்த தொகுப்பை மறக்கமா படிங்க...

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத்: தற்போதைய நவீன யுகத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள், வியாபாரிகள் முதல் வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் யுபிஐ மூலம் பணம் அனுப்பி வருகின்றனர். மொபைல் போன்களில் பணத்தை எடுத்துச் செல்லும் கலாசாரம் பரவி வருவதால் பலரின் பாக்கெட்டுகளில் பணம் இருப்பது இல்லை.

க்யூர் ஆர் கோடு அல்லது தனிப்பட்ட நபரின் வங்கிக் கணக்குகளுக்கு மொபைல் போன் நம்பர் மூலம் நொடியில் பணம் அனுப்பப்படுகிறது. இந்த நடைமுறை நம்மை எவ்வளவு முன்னோக்கி கொண்டு செல்கிறதோ அதேநேரத்தில் சில விபரங்கள் தவறும் பட்சத்தில் அதளபாதாளத்திற்கும் கொண்டு சென்று விடும்.

அதனால் பணப்பரிமாற்றம் மற்றும் ரகசிய எண்களில் எப்போதும் கவனம் வேண்டும். ஒரு சிறு தவறு, நாம் சிறுக சிறுக சேமித்த பணத்தை திருடிச் சென்று விடும். ஆகையால் ஆன்லைன் பணப்பரிமாற்றம் குறித்து வங்கி மற்றும் ஆர்பிஐ கூறும் நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

அப்படி யுபிஐ பணப்பரிமாற்றத்தின் போது ஏற்படும் தவிர்க்க முடியாத தவறுகளை சரி செய்யத் தேவையான சில டிப்ஸ்கள் இதோ. நாம் எதாவது ஒரு பொருள் வாங்கும் போது QR குறியீட்டைக் கொண்டு பணம் செலுத்துகிறோம். இந்த ஸ்கேன் முடியும் முன், விவரங்களை உறுதிப்படுத்த கடைக்காரரிடம் கட்டாயம் கேட்க வேண்டும். அவர் உறுதிப்படுத்திய பின்னரே, நீங்கள் பணத்தை மாற்ற வேண்டும்.

சமூக வலைதளங்களில் உங்களுடன் நட்பு கொள்ளும் மோசடி கும்பல்களால் கட்டாயம் சிக்கல் ஏற்படும். அவர்கள் உங்கள் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து பல்வேறு வகையிலான ஆசை வார்த்தைகளை கூறி டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்யும்படி கேட்பார்கள். அவர்களின் வலையில் விழக்கூடாது என்பதில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

அதிக பாதுகாப்பிற்கு, முடிந்தவரை யுபிஐ பணப்பரிமாற்றங்களுக்கு ஆறு இலக்க ரகசிய எண்ணை பயன்படுத்துவது நல்லது. பலர் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள நான்கு இலக்க ரகசிய எண்ணை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் திருமண நாள், பிறந்த நாள் அல்லது ஆண்டுகளையே அந்த நான்கு இலக்க ரகசிய எண் கொண்டு இருக்கும் என்பதால் மோசடிக் கும்பல் அதை எளிதில் கண்டுபிடித்து விட வாய்ப்பு உள்ளது.

எனவே 4 இலக்க ரகசிய எண்ணை மாற்றுவது மிகவும் நல்லது. மேலும் யுபிஐ செயலியை திறக்க சிறப்பு ரகசிய எண் அல்லது கைரேகை பதிவை பயன்படுத்த வேண்டும். இது மோசடிக் கும்பல், நமது நிதி சார்ந்த தகவல்களை திருடுவதை தடுக்க கூடுதல் பாதுகாப்பு அளிக்கும். சில சமயங்களில் மோசடிக் கும்பல் உங்களுக்கு பணம் அனுப்புவதாகக் கூறி குறுஞ்செய்திகளை அனுப்புவார்கள்.

இந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்து உங்கள் ரகசிய எண்ணை உள்ளிட்டால் பல்வேறு பரிசுகள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறுவார்கள். அதை ஒருபோதும் செய்து விடாதீர்கள். அதன் மூலம் உங்களது நிதி சார்ந்த தகவல்களை திருடி பணம் இழப்பு ஏற்பட அதிகபட்ச வாய்ப்பு உள்ளது. எனவே அது போன்று குறுஞ்செய்திகள் தொடர்ந்து வந்தால் உங்கள் தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து குருஞ்செய்திகளை முடக்கவும் அல்லது காவல்துறையில் முறையாக புகார் அளிக்கவும்.

ஒருவருக்கு பணம் அனுப்பும் போதோ அல்லது வாங்கும் போதோ க்யூர் ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது மட்டுமே யுபிஐ ரகசிய எண்ணை உள்ளிட வேண்டும். பணம் பெறுவதற்கு ரகசிய எண் தேவையில்லை. வங்கிகள் நேரடி யுபிஐ கட்டணங்களையும் அனுமதிக்கின்றன. எனவே, பணம் செலுத்துவதற்கு முடிந்தவரை அவற்றைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.

முடிந்தவரை மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதேபோல் ஒன்று அல்லது இரண்டு யுபிஐ செயலிகளை மட்டும் பயன்படுத்தவும். உங்கள் மொபைல் போன்களில் இரண்டுக்கும் மேற்பட்ட யுபிஐ செயலிகள் இல்லாது இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். யுபிஐ பரிவர்த்தனையை முடித்த பிறகு, வங்கியிலிருந்து பெறப்பட்ட குறுஞ்செய்தியை கவனமாகச் சரிபார்க்கவும்.

யுபிஐ உடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதியை வங்கிகள் வழங்குகின்றன. இந்த வசதியைப் பெறுபவர்கள், எந்தச் சேமிப்புக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:Breaking News: ராஜஸ்தானில் தமிழ்நாடு போலீசார் 12 பேர் கைது!

Last Updated :Mar 6, 2023, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details