தமிழ்நாடு

tamil nadu

அக்னிபத் வீரர்களுக்கு எவ்வளவு நாட்கள் பயிற்சி வழங்கப்படும்? - விவரம் உள்ளே!

By

Published : Jun 23, 2022, 5:38 PM IST

அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் சேரும் வீரர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி முறை குறித்து ராணுவ அலுவலர் ஒருவர் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.

அக்னிபத் திட்டம்
அக்னிபத் திட்டம்

டெல்லி: ஒன்றிய அரசு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கும் 'அக்னிபத்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டமும், வன்முறையும் நடைபெற்றன. அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெறும் எண்ணமே இல்லை என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அக்னிபத் திட்டம் உடனடியாக முடிவு செய்து கொண்டு வரப்படவில்லை எனவும், 2 ஆண்டுகளுக்கு மேல் தீவிர ஆலோசனைக்குப் பிறகு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு 2 ஆண்டுகள், 254 கூட்டங்கள் நடத்தப்பட்டு 750 மணிநேரத்திற்கு மேலான ஆலோசனைக்குப் பிறகு 'அக்னிபத்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டம் குறித்து ராணுவ அலுவலர் ஒருவர் கூறுகையில், "பயிற்சி விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. முன்பு ராணுவ வீரர்கள் 9 மாதங்கள் பயிற்சிபெறுவர். 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் சேரும் அக்னிவீரர் 6 மாதங்கள் மட்டுமே பயிற்சி பெறமுடியும்" என்றார்.

'கடற்படையில் சேர்பவர்களுக்கு முன்பு 22 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டன, அது இப்போது 18 வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அடிப்படைப் பயிற்சி, தொழில்முறை வர்த்தகப் பயிற்சி வழங்கப்படும்' என கடற்படை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானப்படை அலுவலர்கள் கூறுகையில், "முந்தைய பயிற்சி காலம் ஓராண்டில் இருந்து தற்போது 6 மாதங்களாக குறைக்கப்படும். விமானப்படையின் வர்த்தகத்தைப் பொறுத்து மாறுபடும். பயிற்சி முறைகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்திய ஆயுதப் படைகளின் மூன்று சேவைகளின் நவீனமயமாக்கல் மற்றும் தொழில் நுட்ப மேம்பாடு திட்டத்தை மனதில் கொண்டு, பயிற்சிகள் சிறந்த தரத்தில் வழங்கப்படும்" என்று கூறினர்.

இந்திய கடற்படை அலுவலர் தினேஷ் கே திரிபாதி கடந்த செவ்வாய்க்கிழமை கூறுகையில்," குறுகிய காலத்திற்குள் சிறந்த பயிற்சி அளிக்க வகை செய்யப்படும். நான்கு ஆண்டுகளுக்கு ஏற்ப பயிற்சியின் தரம் மேம்படுத்தப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: அக்னிபத் திட்ட ஆள்சேர்ப்பு - விதிமுறைகள், நிபந்தனைகள் என்னென்ன...?

ABOUT THE AUTHOR

...view details