தமிழ்நாடு

tamil nadu

விவசாயி மகன்.. 18 வயதில் ராணுவ பணி.. விபத்துக்கு முன் மனைவியிடம் வீடியோ கால்... உருக்கமான கடைசி நிமிடங்கள்!

By

Published : Dec 9, 2021, 12:33 PM IST

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணித்த இராணுவ வீரர்களின் சொந்த ஊர்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 27 வயதான இளம் வீரர் லான்ஸ் நாயக் சாய் தேஜா, விபத்து நடந்த சில மணி நேரத்துக்கு முன்பாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசியுள்ளார்.

chopper crash
chopper crash

ஹைதராபாத் : நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விமான விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் இராணுவ வீரர்கள் என 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து முப்படைகளின் உயர் மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணுவ வீரர்களின் சொந்த ஊர்களில் காரிருள் சூழ்ந்து காணப்படுகிறது.

சாய் தேஜா

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த லான்ஸ் நாயக் சாய் தேஜா, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விவசாயி மகனான ரவி தேஜா, தனது 18 வயதில் இராணுவ பணியில் சேர்ந்தார்.

இவருக்கு ஷியாமளா என்ற மனைவியும், நான்கு வயதில் மோக்ஷகனா என்ற மகனும் இரண்டு வயதில் தர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். ராணுவ வீரர் சாய் தேஜாவின் இறப்பு எகுவ ரெகட்டா கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோ கால்

சாய் தேஜா, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தனி பாதுகாவலராக கடந்தாண்டு நியமிக்கப்பட்டார். இவர் விபத்து நடைபெற்ற சில மணி நேரத்துக்கு முன்பு தனது மனைவி மற்றும் மகள்களுடன் வீடியோ காலில் மகிழ்ச்சியாக உரையாற்றியுள்ளார்.

விவேக் குமார்

பிபின் ராவத்தின் முதன்மை தனி பாதுகாப்பு அலுவலராக இருந்தவர் லான்ஸ் நாயக் விவேக் குமார். இவர் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மாவட்டம் ஜெய்ஷிங்பூர் பகுதியை சேர்ந்தவர்.

இவரது மறைவுக்கு மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் ஜெய் ராம் தாகூர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது சொந்த ஊரில் கிராம மக்கள் கூட்டமாக கூடியுள்ளனர்.

நாயக் குருசேவக் சிங்

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் உயிரிழந்த 13 பேர்களில் நாயக் குருசேவக் சிங்கும் ஒருவர். இவர் சண்டிகர் மாநிலம் சோதியன் மாவட்டம் தோடே கிராமத்தைச் சேர்ந்தவர். குருசேவக் சிங்கின் மரணம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சத்பால் ராய்

பிபின் ராவத்தின் பாதுகாப்பு அலுவலர்களுள் ஒருவர் சத்பால் ராய். இவர் கூர்கா ரைபிள்ஸில் பணிபுரிந்தவர். இவர் டார்ஜிலிங்கின் கிளேபர்ன்னில் உள்ள மனேதாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவரது இறப்புக்கு சொந்த ஊரில் கிராம மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையும் படிங்க : பிபின் ராவத் மறைவு நாடாளுமன்றத்தில் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details