உத்ரகாண்ட்டில் சுர்சிங் தாரில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் 93 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கல்லூரி விடுதியைக் கட்டுப்பாடு பகுதியாக மாநிலச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மேலும், 200 மாணவர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கோவிட் பரிசோதனையில் கரோனா இல்லை அறிக்கை வந்த 65 மாணவர்கள், வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.