தமிழ்நாடு

tamil nadu

குடியிருப்பு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு!

By

Published : Oct 8, 2022, 10:32 PM IST

ஜோத்பூரில் குடியிருப்பு ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்தனர்.

Four
Four

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ராவத் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் அருகே கேஸ் நிறுவனத்தின் வாகனமும் இருந்ததால், சுமார் 4 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததாக தெரிகிறது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பிறகு தீயில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில், 4 பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா தெரிவித்தார்.

பலருக்கு 80 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த வீட்டில் சட்ட விரோதமாக கேஸ் சிலிண்டர் விற்பனை நடந்ததாகவும், அப்போது எரிவாயு கசிந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நாசிக் அருகே தீப்பிடித்து எரிந்த பேருந்து ... 14 பேர் பலி

ABOUT THE AUTHOR

...view details