தமிழ்நாடு

tamil nadu

பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 9:12 PM IST

பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய செயற்கைக்கோள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி மற்றும் சென்னை கோலா சரஸ்வதி பள்ளியில் பயிலும்  50 மாணவர்கள் ஒன்றிணைந்து, பயிற்சிப் பட்டறை மூலம் இரண்டு கிலோ எடை கொண்ட சிறிய வகை செயற்கைக்கோளை உருவாக்கினர். இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சி சுபம் வித்யா பள்ளி வாளகத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் ஹீலியம் பலூன் மூலம் இந்த சிறிய வகை செயற்கைக்கோள் பறக்கவிடப்பட்டு சுமார் ஒரு லட்சம் அடி உயரத்தில் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இதனை சுமார் மூன்று முதல் 8 மணி நேரம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு, தட்பவெப்ப நிலை, வாயு அழுத்தம், காற்றின் மாறுபாடு வளிமண்டல மாறுபாடு, போன்ற தரவுகளை இந்த செயற்கைக்கோள் பதிவு செய்யும். 

இவற்றின் மூலம் பள்ளியில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இவை பெரும் உதவியாக இருக்கும் என இந்த செயற்கைக்கோள் உருவாக்க வழிகாட்டுதலாகச் செயல்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், பள்ளி செயலர் ஜான்சன், தாளாளர், பள்ளியின் முதல்வர், மற்றும் மாணவ, மாணவிகள் உட்படப் பலர் பங்கேற்றனர். முன்னதாக மத்திய பாதுகாப்புத் துறை, விமான போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் மூலம் இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி பெறப்பட்டது. 

ABOUT THE AUTHOR

...view details