தமிழ்நாடு

tamil nadu

அண்ணாமலையார் கோயில் பங்குனி பிரதோஷம்! நந்தி சிலைக்கு சிறப்பு வழிபாடு - Annamalaiyar Temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 10:07 AM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கக்கூடியது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள பெரிய நந்திக்கு பங்குனி மாத பிரதோஷம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. பௌர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மகா நந்திக்கு பிரேதோஷம் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், பங்குனி மாத பிரதோஷ தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட வண்ண மலர்களால் மாலை அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த பங்குனி மாத பிரதோஷத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அண்ணாமலையாரையும், நந்தியையும் மனமுருக வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details