தமிழ்நாடு

tamil nadu

முதியவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.5.30 லட்சம் கொள்ளை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 10:15 PM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பெரிய சப்படி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 60). இவர் சூளகிரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துவிட்டு, தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு சப்படி கிராம பகுதியில் உள்ள தனியார் வங்கியில் 5.30 லட்ச ரூபாய் பணத்தை டெபசிட் செய்ய சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட இரண்டு மர்ம நபர்கள் முதியவர் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்துள்ளனர். இதனை அறியாமல் சென்று கொண்டு இருந்த முதியவரின் வாகனத்தைச் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த மர்ம நபர்கள், சில ரூபாய் நோட்டுகளைச் சாலையில் வீசி விட்டு, முதியவரிடம் உங்கள் பணம் சிதறி கிடைப்பதாகக் கூறியுள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த முனுசாமி இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையில் விழுந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளார். அப்போது வாகனத்தின் முன் பகுதியிலிருந்த  5.30 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த முதியவர் முனுசாமி, இது குறித்து சூளகிரி காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சூளகிரி போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details